Headlines
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் இன்று 11.06.2025 தும்மனட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நிகழ்ச்சி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு இயக்கத்தில் உறுப்பினராக இணைவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கூட்டுறவானது தனியார் மற்றும் பொதுத்துறைக்கு இடையேயான இணைப்பு பாலமாக செயல்பட்டு பல்வேறு மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி புரிந்து வருகிறது…

Read More
வாணியம்பாடியில் ஏடிஎம் மையங்களில் பொதுமக்களிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து இருவர் கைது

வாணியம்பாடியில் ஏடிஎம் மையங்களில் பொதுமக்களிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து இருவர் கைது.

வாணியம்பாடி,ஜூன்.11- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஏடிஎம் (ATM) மையங்களுக்கு வரக்கூடிய பொதுமக்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஏடிஎம் கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை எடுத்து ஏமாற்றி வந்த நபர் குறித்து காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன் அடிப்படையில் ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த தனராணி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.எல் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம்…

Read More
வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம்.

வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம்.

அரசின் திட்டங்களுக்கு எதிராக சாடும் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியக்கோடி நடவடிக்கை. வாணியம்பாடி,ஜூன்.11-திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர் சக ஆசிரியை ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் கல்லூரி கனவு திட்டம் அந்த திட்டம் இந்த திட்டம் என கூறி கோடை விடுமுறையிலும் இந்த அரசின் கீழ்…

Read More
பழனியை அருகே நெய்க்காரபட்டி கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

பழனி அருகே நெய்க்காரபட்டி கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

பழனி, அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன் கோயில், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா 27.5.2025 ( செவ்வாய்க்கிழமை ) ஆம் தேதி அன்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது. சண்முக நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம் எடுத்து வந்தனர். பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முடியிறக்குதல், பூச்சட்டி எடுத்தல் போன்ற…

Read More
உலகப் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி மலர் அலங்காரங்கள் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

உலகப் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி மலர் அலங்காரங்கள் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்.

உலகமெங்கும் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி, ஆண்டுதோறும் நடைபெறும் மலர்களின் சங்கம நிகழ்வாக, இந்த ஆண்டும் பல சிறப்பான மலர்ச் சிற்பங்களுடன் மிகச் சிறப்பாக தொடங்கி நடைபெற்றது இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் கண்காட்சி மண்டபங்களை அலங்கரிக்கின்றன. குறிப்பாக, ரோஜா, டாலியா, லில்லி, ஆர்கிட், கார்னேஷன் மற்றும் பசுமை செடிகள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன இந்த கண்காட்சிக்காக 100க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், மலர் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் தீவிரமாக பணியாற்றினர் அவர்களது…

Read More
உலக சுற்றுச்சூழல் தினம் கூட்டுறவுத்துறை - ஒருங்கிணைந்த தூய்மை பணி.

உலக சுற்றுச்சூழல் தினம் கூட்டுறவுத்துறை – ஒருங்கிணைந்த தூய்மை பணி.

உலகச்சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணைப்படி, கூட்டுறவுத்துறையின் சார்பில் மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக்கூட்டுறவு நிறுவனங்கள், அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஒருங்கிணைந்த தூய்மை செய்யும் பணி மேற்க்கொள்ளப்பட்டது. இதில் மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் கோத்தகிரி வட்டத்தில் உள்ள கோத்தகிரி கூட்டுறவுப் பண்டகசாலையிலும், அரவேணு தொடக்க வேளாண்மைக்கூட்டுறவுக்கடன் சங்க நியாயவிலைக்கடையிலும் , மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் உருளைக்கிழங்கு ஏலமையத்தின் சுற்றுப்புற பகுதி ஆகிய பகுதிகளில்…

Read More
கூட்டுறவுத்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

கூட்டுறவுத்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

கூட்டுறவுத்துறை மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் – குன்னூர் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் குன்னூர் இரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்றது. இந்த முகாமில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அத்துடன் ஏதேனும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டு, கண் மற்றும் கண் கண்ணாடி பராமரிப்பு குறித்த…

Read More
கூட்டுறவுத்துறை ரூபாய் 16 இலட்சம் கடன் வழங்கல்.

கூட்டுறவுத்துறை ரூபாய் 16 இலட்சம் கடன் வழங்கல்.

உதகை வட்டம், இத்தலார் பகுதியில் அமைந்துள்ளது மகாலிங்கா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் தலைமை வகிக்க, மரு. தே. சித்ரா மேலாண்மை இயக்குநர் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னிலை வகித்தார். இதில் சூரியன் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய்- 15,00,000/-ம் மற்றும் ஒரு நபருக்கு மாற்றுத்திறனாளி கடனாக ரூபாய் – 1,00,000/-ம் நீலகிரி…

Read More
சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் !

சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செரத்தனூர் கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது கனிமவளக் கொல்லையில் ஈடுபட்ட டிராக்டர் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதைக் குறித்து சிரத்தனூர் கிராம நிர்வாகி திருநாவலூர் வருவாய் ஆய்வாளர் உளுந்தூர்பேட்டை துணை வட்டாட்சியர் மதிப்புக்குரிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இடம் இன்று பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை…

Read More
குற்றாலம் சீசனை முன்னிட்டு மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்.திருநெல்வேலி மேலாண் இயக்குனர் தசரதன் விளக்கம்

குற்றாலம் சீசனை முன்னிட்டு மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்.திருநெல்வேலி மேலாண் இயக்குனர் தசரதன் விளக்கம்.

தென்காசிஜூன் – 4 தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் தொடங்கியதை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்வது வழக்கம் இந்நிலையில் இந்த வருடத்திற்கான சீசன் மே மாதத்திலேயே தொடங்கியதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சுற்றுலா பயணிகளுக்கு அதிகப்படியான பேருந்துகளை இயக்க தமிழக முதல்வரின் ஆணையின்படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா சிவசங்கர் உத்தரவின்…

Read More