கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை உதகை தி.மு.க அலுவலகத்தில் கொண்டாடிய கட்சி நிர்வாகிகள்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் அ இராசா MP அவர்கள், மற்றும் மாவட்ட பொறுப்பாளர் K.M. ராஜு அவர்களின் ஆலோசனைப்படி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு உதகை தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் K.M. ராஜு அவர்கள் கழக கொடியினை ஏற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி செம்மொழி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
