Headlines
கேரடாமட்டம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை – உடனடி நடவடிக்கை கோரிக்கை

கேரடாமட்டம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை – உடனடி நடவடிக்கை கோரிக்கை.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கேரடா மட்டம் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. முக்கியமாக குடிநீர் பற்றாக்குறை கடுமையாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு நிதியில் இருந்து சம்பந்தப்பட்ட துறை மூலம் இரண்டு கிணறுகள் தோண்டப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில் தண்ணீர் கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனுடன், சமீபத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை தற்போது பழுதடைந்த நிலையில்…

Read More
70 வயது தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்.. மடத்துக்குளம் சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்றது.

70 வயது தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்..மடத்துக்குளம் சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள KTL சித்தி விநாயகர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியான மூத்த தம்பதியனருக்கு சிறப்பு செய்தல் விழா நடைபெற்றது. 70 வயது பூர்த்தியான தம்பதியர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வருடம்தோறும் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விழாவானது தொடர்ந்து நடத்தப்பட்டது வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினத்தில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி…

Read More
உதகையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட ஏழை எளிய மக்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் உதவி.

உதகையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட ஏழை எளிய மக்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் உதவி.

ஏழை எளிய மக்களும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் விதமாக திருப்பூர் ப்ராண்டியர் நிட்டர்ஸ் ( p) லிமிடெட் சார்பில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 500 மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட வேண்டிய மளிகை சாமான்களும் உதகை சாதி மஹாலில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருப்பூர் பிராண்டியார் நி ட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் திரு ஜாபர் முகமது தாஜுதீன் மற்றும் உதகை காங்கிரஸ் அணி சாதிக் மற்றும் சாதி மஹால் நிர்வாகிகள்…

Read More
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சாதனை

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சாதனை

கட்டி பாதிப்பால் செயலிழந்த வாலிபரின் கை மீட்பு – பல மணி நேர அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி. கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கட்டி பாதிப்பால் செயலிழந்த வாலிபரின் கையை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பல மணி நேரம் போராடி மேற்கொண்ட சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். டாக்டர் நோபிள் தலைமையிலான மருத்துவக் குழு, நவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தி இந்த அரிய சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த…

Read More
இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கோவை: பாரம்பரிய சித்த மருத்துவத்தை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் கோவை மாவட்டம் திருப்பூர் மாவட்டம் என பல மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரம்பரிய மருத்துவர்களை அங்கீகரிப்பது, வைத்தியர்களின் வயிற்றில் அடிக்காதே, முதல்வர் அண்ணாச்சி கடந்த தேர்தல் அறிக்கை என்னாச்சு, பாரம்பரிய வைத்தியர்களை ஏமாற்றாதே! பாரம்பரிய வைத்தியர்களை தாசில்தார்களைக் கொண்டு கணக்கெடுத்து பதிவு செய்து…

Read More
சோதனைகளை சாதனைகளாக மாற்றிய மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையாளர் "சித்ரா விஜயன்" (IAS)...

சோதனைகளை சாதனைகளாக மாற்றிய மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையாளர் “சித்ரா விஜயன்” (IAS)…

மதுரை மாநகராட்சி கடந்த சில ஆண்டுகளாக அரசியல் தலையீடுகள், நிர்வாக குழப்பங்கள், சொத்து வரி முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் கடுமையான நெருக்கடியை சந்தித்து வந்தது. குறிப்பாக 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஐந்து மாநகராட்சி ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம், அந்த நிர்வாகச் சிக்கல்களின் தீவிரத்தைக் காட்டும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகராட்சிக்கு ஆணையாளராக பொறுப்பேற்கவே சில ஐஏஎஸ் அதிகாரிகள் தயக்கம் காட்டியதாகவும் கூறப்பட்டது. இத்தகைய சவாலான…

Read More
கோவை மாநகராட்சி 80-வது வார்டில் 4 ஆண்டுகால சாதனை கூட்டம்.

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் 4 ஆண்டுகால சாதனை கூட்டம்.

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் 4 ஆண்டுகால சாதனை பயணம்! – பகுதி சபா கூட்டத்தில் பட்டியலிட்ட பொது சுகாதார குழு தலைவர்! ​கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட செட்டி வீதி மற்றும் கொங்கு மஹாலில் பகுதி சபா கூட்டம் 07-02-2026 மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதார குழு தலைவருமான திரு. பெ.மாரிசெல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் வார்டில்…

Read More
மறவன்குடியிருப்பு தேவாலய பங்கு பேரவையில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு – மக்கள் போராட்டம், போலீஸ் குவிப்பு

மறவன்குடியிருப்பு தேவாலய பங்கு பேரவையில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு – மக்கள் போராட்டம், போலீஸ் குவிப்பு.

மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா தேவாலய பங்கு பேரவையில் பல கோடி ரூபாய் நிதி மற்றும் சொத்து முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் வழங்கிய நன்கொடைத் தொகைகள் மற்றும் சொத்துக்கள் பங்கு பேரவையின் அதிகாரப்பூர்வ கணக்கில் சேர்க்கப்படாமல், தனியாக தொடங்கப்பட்ட டிரஸ்ட் மூலம் வரவு வைக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க…

Read More
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்.

நாகர்கோவில், பிப். 9: முதலமைச்சர் தொடங்கிய திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவு; கன்னியாகுமரியில் 3,200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெற்றனர். தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர்களுக்கான 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தெரிவித்தார். ஏழை, எளியோரின் பசியை போக்கும் நோக்கில் செயல்படும் அரசு இதுவென அவர் பெருமிதம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து,…

Read More
செங்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர் மன்ற தலைவி ராமலட்சுமி துவக்கி வைத்தார்

செங்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர் மன்ற தலைவி ராமலட்சுமி துவக்கி வைத்தார்.

தென்காசி பிப்ரவரி 9 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் விழா செங்கோட்டை மேலூர் திருமண மண்டபத்தில் துவக்கி வைக்கப்பட்டது. தமிழக அரசின் முத்தான திட்டமான நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி ஊராட்சி மன்றங்களில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் இன்று திருவள்ளூர் மாவட்டம் போளி வாக்கத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து செங்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் 100…

Read More