Headlines
பாதுகாப்பே முன்னுரிமை: சாலை விதிமீறலுக்கு யாருக்கும் விதிவிலக்கு இல்லை! என மாவட்ட ஆட்சியர்... நாகர்கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் காவல்துறையின் செயல்பாட்டை பாராட்டிய மாவட்ட நிர்வாகம்.

பாதுகாப்பே முன்னுரிமை: சாலை விதிமீறலுக்கு யாருக்கும் விதிவிலக்கு இல்லை! என மாவட்ட ஆட்சியர்… நாகர்கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் காவல்துறையின் செயல்பாட்டை பாராட்டிய மாவட்ட நிர்வாகம்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் அவர்களுக்கு, நாகர்கோவிலில் செய்தித்துறை மற்றும் நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராஜேஷ் குமார் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் பிரதாப் விழாவில் உரையாற்றினார். விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், சாலைப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதில் மாவட்ட காவல்துறை எவ்வித விதிவிலக்கும் இன்றி செயல்பட்டு வருவதாகக் கூறினார். “மாவட்ட ஆட்சியரான நானே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றாலும் அபராதம்…

Read More
300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு! நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு!நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

கோவை தெற்கு வட்டம், உப்பார வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோவில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இக்கோவில் நிர்வாகம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் சாவியானது புதிய கமிட்டியிடம் நேற்று (ஜூலை 2) முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் 1972ஆம் ஆண்டு உத்தரவின்படி, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாகக் குழுவே இக்கோவிலை நிர்வகிக்க…

Read More
நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நாகர்கோவில்: தமிழகத்தில் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, இடதுசாரி கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு DYFI மாவட்ட செயலாளர் தோழர் விஷ்ணு தலைமை தாங்கினார். RYA அமைப்பைச் சேர்ந்த தோழர் அனிற்டா பிரின்ஸ் ஆர்ப்பாட்டத்தைத்…

Read More
பழனி கோட்டத்தில் 89,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

பழனி கோட்டத்தில் 89,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

பழனி : ஜூலை 02,தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், பழனி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று (01-07-2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.பாலசமுத்திரம் குரும்பப்பட்டியில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, பழனி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் முத்துசாமி பாண்டியன் தலைமை தாங்கி, தடுப்பூசி பணியினைத் தொடங்கி வைத்தார். இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சத்யா ஆகியோர் அடங்கிய கால்நடை…

Read More
டிஜிட்டல் பரிவர்த்தனையைப் புறக்கணித்த ‘SK பியூல்’ சிஎன்ஜி பெட்ரோல் பங்க்: திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

டிஜிட்டல் பரிவர்த்தனையைப் புறக்கணித்த ‘SK பியூல்’ சிஎன்ஜி பெட்ரோல் பங்க்: திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

​திண்டுக்கல்:மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe) போன்ற யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும் இத்தகைய டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை, திண்டுக்கல்லில் உள்ள ‘SK பியூல்’ (SK Fuel) சிஎன்ஜி பெட்ரோல் பங்க் நிர்வாகம் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது. பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​பங்க் மேனேஜருடன் வாக்குவாதம்:இந்த பெட்ரோல் பங்க்கில் டிஜிட்டல்…

Read More
கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

முதலமைச்சர் திரு, ச. ஜோசப்விஜய் அவர்களின், 52- வது பிறந்த நாளை ஒட்டி கோவை மாவட்டம் 35-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் திரு. V. சம்பத்குமார் அவர்கள், பள்ளி குழந்தைகளுக்கான நோட் புத்தகங்களையும் துப்புறவு பணியாளர்களுகு, நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். உடன் வார்டு செயலாளர், திரு,நாராயணன், கட்சி நிர்வாகிகள், மற்றும்பொதுமக்கள்,கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம்…

தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்ருமான ஜோசப் விஜயின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தவெக நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர். இந்த ரத்த தான நிகழ்வில் தவெக நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் என 52 பேர் ரத்த தானம் செய்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா ரத்தம் மற்றும் பிரவீன் குமார் வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள் . பழனி பாலன்,…

Read More
சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி.

உடல், மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல்துறை முன்னெடுப்பு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 20) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காவல்துறையினரின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தினசரி காவல் பணிகளில் நீண்ட…

Read More
உள்ளூர் வேலைவாய்ப்பு கோரி கூடங்குளத்தில் சாலை மறியல்

உள்ளூர் வேலைவாய்ப்பு கோரி கூடங்குளத்தில் சாலை மறியல்.

NPCIL ஆட்சேர்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய நுழைவுவாயில் முன்பு, நிரந்தர பணியிடங்களில் உள்ளூர் பகுதி மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அணுமின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அணுமின் நிலையம் செயல்பட்டு…

Read More
717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் ஆலன்கோட்டையில் தொடரும் அவலம்? – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்!

717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் ஆலன்கோட்டையில் தொடரும் அவலம்? – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்!

பேருந்து நிறுத்தத்தில் போதையில் அநாகரிகமாக கிடக்கும் நபர்கள்; பெண்கள், மாணவிகள் அச்சம் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 717 அரசு டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில், ஜூன் மாத முதல் வாரத்திற்குள் குறிப்பிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள்…

Read More