காதல் தகராறில் வாலிபர் தலையில் ஹாலோபிளாக் கல்லால் தாக்குதல்: வாலிபர் கைது, சிறையில் அடைப்பு!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே, ஒருதலைக் காதலால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை ஹாலோபிளாக் கல்லால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மடத்துக்குளம் அடுத்துள்ள துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த வனசின்னத்துரை என்பவரின் மகள் சௌமியாவை, அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் ரஞ்சித் (19) என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதற்கு சௌமியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், அடிக்கடி மதுபோதையில் பெண் வீட்டார் வசிக்கும்…
