டெங்கு அச்சத்தில் சிவகிரிபட்டி கிராமம்: தூர்வாரப்படாத சாக்கடைகளால் நோய் பரவும் அபாயம் – துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பழனி : ஆகஸ்ட் 31, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிபட்டி ஊராட்சியில் சரிவர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் அப்பகுதி மக்களிடையே நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாலசமுத்திரம் மருத்துவ நகர், பாண்டியன் நகர், சிவகிரிபட்டி, தட்டான்குளம், சேரன் ஜீவா நகர் மற்றும் திருநகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் செல்லும் பாதைகள் நீண்டகாலமாகத் தூர்வாரப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. சாக்கடைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாததாலும், சுழற்சி முறையில் கொசுமருந்து அடிக்கப்படாததாலும், குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் விநியோகிக்கப்படுவதாலும் அப்பகுதியில்…
