Headlines
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!

திருநெல்வேலி, அக. 3:- நெல்லை பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, இன்று (அக்டோபர். 3) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறப்பினர் வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ…

Read More
கடலூர் : நர்ஸ் வீட்டில் ரூ 15 லட்சம் பணம் -நகை திருட்டு.!

கடலூர் : நர்ஸ் வீட்டில் ரூ 15 லட்சம் பணம் -நகை திருட்டு.!

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி என் எல் சி பொது மருத்துவமனையில் தலைமை நர்ஸ்சாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் 5 வெள்ளி கொலுசு, கேமரா,ரூ 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். அதன் மதிப்பு ரூ 15லட்சம் இருக்கும். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி செய்தியாளர்…

Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் ஒன்பதாவது சோதனை சாவடியில், 2/10/2025 அன்று வன உயிரின வார விழா தொடங்கப்பட்டது..

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் ஒன்பதாவது சோதனை சாவடியில், 2/10/2025 அன்று வன உயிரின வார விழா தொடங்கப்பட்டது..

அதை முன்னிட்டு கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு , வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும், நெகிழிப்பைகள் பயன்பாட்டால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நெகிழியை தவிர்ப்போம்.! புவியை காப்போம்.! என்ற தலைப்பில் அமராவதி வனச்சரக அலுவலர் புகழேந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நெகிழிப்பைக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.. இதில் உடுமலை வனச்சரக அலுவலர் வாசு, வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வனப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

Read More
நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது..

நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது..

அக் 02 கன்னியாகுமரி – ஆட்டோ சங்க ஆயுத பூஜை விழா உற்சாகம் நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் திராவிட முன்னேற்ற கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாநில துணைச் செயலாளரும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் மு. சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பி.எம்.சி. மோகன் (கிழக்கு மாவட்ட விவசாய…

Read More
திருநெல்வேலியில், மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற, காந்தி ஜெயந்தி விழா! அண்ணலாரின் திருவுருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்ச்சான்றோர்!

திருநெல்வேலியில், மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற, காந்தி ஜெயந்தி விழா! அண்ணலாரின் திருவுருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்ச்சான்றோர்!

திருநெல்வேலி, அக். 2:-மகாத்மா காந்தியடிகள், திருநெல்வலி டவணில், “தேசபக்தர்” சாவடி கூத்த நயினார் பிள்ளை இல்லத்தில் அரிஜன,புனித யாத்திரை நிகழ்வின் போது, 1934 -ஆம் வருடம் ஜனவரிமாதம் 23,24 ஆகிய இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அவர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்து, கூட ஒரு நாள் தங்கினார். நெல்லையில், காந்தியடிகள் தங்கியிருந்து மகிழ்ந்த அந்த இல்லத்தில், அவர் தங்கியிருந்த அறை புனிதமாக கருதப்பட்டு, இனறும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த புனித அறையில், மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் விழா,…

Read More
திருநெல்வேலியில், காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தீபாவளி தள்ளுபடி கதர் விற்பனையை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலியில், காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தீபாவளி தள்ளுபடி கதர் விற்பனையை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி, அக், 2:- திருநெல்வேலி பாளையங்கோட்டை, ஆயுதப்படை காவல் பிரிவு எதிரே அமைந்துள்ள கதர் அங்காடியில், “தேசப்பிதா” அண்ணல் மகாத்மா காந்தியடிகளின், 157- வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, இன்று (அக்டோபர். 2) காலையில், அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின்னர், “தீபாவளி” கதர் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “இந்த தீபாவளி கதர் சிறப்பு விற்பனைக்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, குறிப்பிடத்தக்க அளவில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, குறிப்பிடத்தக்க அளவில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி, அக். 2:-திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரன், இன்று ( அக்டோபர். 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட் டிருப்பதாவது:-“சமீப காலங்களில், சமூக ஊடகங்கள் வாயிலாக, சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தும் விதமாகவும், பிற சமுதாயங்களை தரம் தாழ்த்தும் விதமாகவும், உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். இது, சமூகத்தில் ஜாதிய உணர்வுகளை தூண்டும் அபாயத்தை உருவாக்கி, பொதுமக்களிடையே தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சமூக அமைதிக்கு இடையூறாக…

Read More
உடுமலையில் உள்ள பல்வேறு கோவில் மற்றும் பள்ளிகளில் இன்று விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலையில் உள்ள பல்வேறு கோவில் மற்றும் பள்ளிகளில் இன்று விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

அக் 02. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு கட்டமாக இன்று 10 நாள் நிகழ்ச்சி விஜயதாசமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசுரன் எனும் அரக்கனை தேவி பல்வேறு அவதாரங்கள் எடுத்து போரிட்டு இறுதியில் 10-ம் நாளில் மகிஷாசுரனை அளித்தார் என்பது புராண கால வரலாறு,வெற்றியின் நாளாக கருதப்படும் விஜயதசமி நாளில் தொடங்கப்படும் எந்த காரியமும் வெற்றியில் முடியும் என்பது மக்களில் நம்பிக்கை, அதன் படி…

Read More
சாலையோர கடைகளினால் விபத்து ஏற்படும் அபாயம்….

சாலையோர கடைகளினால் விபத்து ஏற்படும் அபாயம்….

பெரிய விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக காவல்துறையினர் அல்லதுதேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?…. என்று பொதுமக்கள் கேள்வி..? நீலகிரி மாவட்டம் கேத்தி ராஜ்குமார் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பலர் கடைகளை அமைத்து சுற்றுலா பயணிகளை தொந்தரவு செய்வதும் அல்லாமல் சுற்றுலா பயணிகள் அவர்கள் வரும் வாகனத்தை நிறுத்தி இயற்கை ரசிக்கக் கூடிய இடத்தை ஆக்கிரமித்து உள்ளதால் இங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது இதனால் அங்கு விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது….

Read More
முதலமைச்சர் கோப்பை 2025 சென்னை போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணத்தை துவக்கி வைத்தல்..

முதலமைச்சர் கோப்பை 2025 சென்னை போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணத்தை துவக்கி வைத்தல்..

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி மாணவிகள் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேருந்து பயணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் கொடியாசித்து துவக்கி வைத்தார். அப்போது உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர். கோவை மாநகராட்சி மேயர் திருமதி ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் துறை சார்ந்த…

Read More