Headlines
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டத்திற்குட்பட்ட மெட்ராத்தி ஊராட்சி சமுதாய கூடத்தில் ரேவதி மெடிக்கல் சென்டர் & அறக்கட்டளை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டத்திற்குட்பட்ட மெட்ராத்தி ஊராட்சி சமுதாய கூடத்தில் ரேவதி மெடிக்கல் சென்டர் & அறக்கட்டளை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ். தங்கராஜ் அவர்கள் தலைமையில், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் திரு எஸ்.ஏ.ஐ.நெல்சன் அவர்கள் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர் திரு டி.சிவலிங்கம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் மடத்துக்குளம் திருமதி.லதாபிரியா ஈஸ்வரசவாமி அவர்களும், ஒன்றிய குழு தலைவர் மடத்துக்குளம் செல்வி.காவியா ஐயப்பன் அவர்களும், மெட்ராத்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு வே.பாலசுப்பிரமணியம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வின் சமூக ஆர்வலர் திரு பி.எஸ்.டி கௌதம்…

Read More
உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட கோரிக்கை.!

உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட கோரிக்கை.!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி.என்.சி மெஷின் & டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம்…

Read More
உடுமலையில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

உடுமலையில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.அத்துடன் மலை மீது உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்கங்களும் அமைந்து உள்ளது.பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்ய பிரதோஷ தினத்தன்று மற்றும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.அதன்படி நேற்று புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பஞ்சலிங்கங்களுக்கு பால், சந்தனம்,தயிர்,பன்னீர், இளநீர்,மஞ்சள்,விபூதி, அரிசி, மாவு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில்…

Read More
தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாராபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கும் விழா.

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாராபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கும் விழா.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 24 வது வார்டு கண்ணன் நகர் பகுதியில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கி குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. திமுக நகர மன்ற தலைவர் பொறியாளர் கு. பாப்பு கண்ணன் ME(Str).,LLB., அவர்கள் தலைமையிலும் , திமுக நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு.முருகானந்தம் BE. முன்னிலையிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதிகுழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் கிரிஜா 24 வது நகர…

Read More
உலக அமைதி நாளை முன்னிட்டு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சுமார் 1500 பேர் ஒரு நிமிடம் அமைதி காக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உலக அமைதி நாளை முன்னிட்டு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சுமார் 1500 பேர் ஒரு நிமிடம் அமைதி காக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி உலக அமைதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த பிறகு மீண்டும் அது போன்ற ஒரு கொடூரமான போர் எங்கும் நிகழாமல் இருக்கும் வகையில் பல்வேறு நாடுகள் இணைந்து நவம்பர் 11ம் தேதியை உலக அமைதி நாளாக கடைபிடித்து வருகின்றன. அந்த வகையில் இன்று நவம்பர் 11ஆம் தேதியை முன்னிட்டு 11 மணி 11 நிமிடத்திற்கு ஒரு நிமிடம் முழு அமைதியை கடைபிடிக்கும் வகையிலான நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில்…

Read More
வாணியம்பாடி முஹம்மத் அலி பஜாரில் தாறுமாறாக ஓடிய கார் கடைக்குள் நுழைந்ததால் பரபரப்பு. கடையில் இருந்த பொருட்கள் மற்றும் 6 இரு சக்கர வாகனங்கள் சேதம்.

வாணியம்பாடி முஹம்மத் அலி பஜாரில் தாறுமாறாக ஓடிய கார் கடைக்குள் நுழைந்ததால் பரபரப்பு. கடையில் இருந்த பொருட்கள் மற்றும் 6 இரு சக்கர வாகனங்கள் சேதம்.

வாணியம்பாடி,நவ.13- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஹம்மத் அலி பஜார் பகுதியில் அவ்வழியாக வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. அப்போது பஜார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 இரு சக்கர வாகனங்கள் மீது மோதி சேதப் படுத்திய பின்னர் ரிஸ்வான் என்பவரின் கடைக்குள் புகுந்தது. இதனால் கடையில் இருந்த பொருட்கள் சேதமானது.இதை தொடர்ந்து காரில் வந்த நபர்கள் காரை அங்கேயே விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.இதனால் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ…

Read More
உடுமலை மூணாறு சாலையில்உலா வரும் காட்டு யானைகள்வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

உடுமலை மூணாறு சாலையில் உலா வரும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

உடுமலை- மூணாறு சாலையில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்து யையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்ப கம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சர கங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெ ருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின் றன. அதிகம்…

Read More
திருநெல்வேலியில், மாவட்ட காவல்துறை நடத்திய, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நேரில் பங்கேற்பு!

திருநெல்வேலியில், மாவட்ட காவல்துறை நடத்திய, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நேரில் பங்கேற்பு!

திருநெல்வேலி, நவ.13:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில், நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று [நவ.13] காலையில் திருநெல்வேலியிலும், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” என்.சிலம்பரசன் தலைமையில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த கூட்டத்தில்,“மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” சிலம்பரசன் பங்கேற்று, மனு கொடுக்க வந்திருந்த…

Read More
திருநெல்வேலியில், பிரபல எழுத்தாளர் ராஜ்கவுதமன் திடீர் மறைவு! முதலமைச்சர் உத்தரவுபடி, நேரில் சென்று அஞ்சலி செலுத்திய, முன்னாள் அமைச்சர்!

திருநெல்வேலியில், பிரபல எழுத்தாளர் ராஜ்கவுதமன் திடீர் மறைவு! முதலமைச்சர் உத்தரவுபடி, நேரில் சென்று அஞ்சலி செலுத்திய, முன்னாள் அமைச்சர்!

திருநெல்வேலி,நவ.13:- தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், பிரபல எழுத்தாளருமான ராஜ்கவுதமன், இன்று [நவ.13] அதிகாலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள, அவருடைய இல்லத்தில், காலமானார்.அவருக்கு வயது 74. மறைந்த ராஜ்கவுதமன், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ்க்கலாச்சார மற்றும் இலக்கிய வரலாற்று ஆய்வுகளுக்கு, முன்னோடியாக திகழ்ந்தவர் ஆவார். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை, தன்னுடைய எழுத்து மூலம், தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை, ராஜ்கவுதமனுக்கு மட்டுமே உரியதாகும். இவருடைய மறைவுச்செய்தி அறிந்தவுடன், தமிழ்நாடு முலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கற்செய்தி…

Read More
திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூர்த்தி மலை. சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தலத்தை ‘தென் கயிலாயம்’ என்று போற்றுகின்றனர், பக்தர்கள். மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், தெற்குச் சாமி, கஞ்சிமலையான், தென்கயிலாய மூர்த்தி என்றெல்லாம் இறைவனை அழைக்கும் உன்னதமான திருத்தலம் இது. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று…

Read More