பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் 230 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய, எம்.எல்.ஏ.அப்துல் வகாப்!
தென்னிந்திய திருச்சபையின் [டயோசீசன்] கீழ்,பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள, பழைமைவாய்ந்த பள்ளிகளுள் ஒன்றான, “கதீட்ரல்” ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழக அரசின் “விலையில்லா” மிதிவண்டிகள் வழங்கும் விழா குழந்தைகள் தினமான, இன்று [நவ.14] காலையில், நடைபெற்றது. இவ்விழாவில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மொத்தம் 230 மாணவர்களுக்கு, இலவச சைக்கிளை வழங்கி, வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின்…
