குமரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்: அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தார்..!
கன்னியாகுமரி, மார்ச் 6: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத் துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார். இதன் ஒரு பகுதியாக, இறச்சகுளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை அவர் விமர்சையாகத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். இந்த விழாவில், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமான திரு. மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் திமுக…
