தமிழ்நாடு
விதிமீறல்: 6 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் திண்டுக்கல் ஏபிஆர்ஓ – சமூக ஆர்வலர்கள் கண்டனம்!
திண்டுக்கல், ஏப்ரல் 9:திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் (PRO office) உதவி மக்கள் தொடர்பு அலுவலராக (APRO) பணியாற்றி வரும் இளையேந்திரன் என்பவர், அரசு விதிகளுக்குப் புறம்பாக கடந்த 6 ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே பணியாற்றி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணி இடமாற்ற விவகாரம்:பொதுவாக அரசு ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். அந்த வகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இளையேந்திரன் திண்டுக்கல்லில்…
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு.
கோவை, ஏப். 08:கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் நேற்று மாலை (06.03.2026) மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பகுதிச் செயலாளர் திரு. மதியழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் திரு. சூரிய பிரகாஷ் அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முறைப்படி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், வார்டு வாரியாகப் பொறுப்பு…
கன்னியாகுமரியில் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை
ஊர் கோவில் 14 சென்ட் நிலத்திற்கு முறைகேடாக பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட புதூர் பொதுமக்கள் நாகர்கோவில், ஏப். 8: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதூர் பகுதியில், ஊர் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் 14 சென்ட் நிலத்திற்கு, பொன்சந்திரன் மற்றும் அசோகன் ஆகிய இருவரின் பெயரில் பட்டா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காரணமாகக் கூறப்படும் கிராம நிர்வாக அதிகாரி ராகுல் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
நாகர்கோவில் நகைக்கடன் நிறுவனத்தில் மின்கசிவால் தீ விபத்து: கணினிகள், குளிரூட்டிகள் எரிந்து நாசம்
நாகர்கோவில், ஏப். 8: நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தங்க நகைக் கடன் நிறுவனத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மின்னணு சாதனங்கள் முழுமையாக எரிந்து நாசமாகின.இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நிறுவனத்தின் அருகே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி (High tension wire) எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்துள்ளது.அந்த அறுந்த கம்பியானது, நிறுவனக் கட்டிடத்திற்குள் செல்லும் மின்கம்பியின் மீது உரசியதில் கடுமையான மின்கசிவு ஏற்பட்டு…
திருப்பூர் தெற்கில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.
ஏப்ரல் 06, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கணியூர் பேரூர் கழக அதிமுக முன்னாள் செயலாளர் காஜாமைதீன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, ஒன்றிய கழக செயலாளர் சாகுல் அமீது, செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, கணியூர்…
நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?
நாகர்கோவில் தொகுதியில் ஆளும் திமுக கட்சி சார்பில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வேட்பாளராக எஸ். ஆஸ்டின் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தரப்பில் மட்டும் மூன்று வேட்புமனுக்களும், அதே கட்சியின் எம். சிவராஜ் தரப்பில் ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொகுதி மக்களிடையேயும் அரசியல் களத்திலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே தொகுதியில் ஒரு கட்சிக்கு ஏன் இத்தனை மனுக்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழலாம். இது எந்தவித உள்கட்சிப்…
தோல்வி பயத்தில் திணறும் விளவங்கோடு காங்கிரஸ்! கேரளா வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராகவே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை இறங்கினர்.
விளவங்கோடு, ஏப். 4: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட, கேரளாவைச் சேர்ந்த டி.டி. பிரவீன் என்பவரை வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து, அந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறக் கோரி இன்று விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “விளவங்கோட்டில் காங்கிரஸுக்கு உள்ளூர் முகங்கள் இல்லையா?”, “கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த தொண்டர்களின் தியாகத்திற்கு இதுவே பரிசா?” என்ற கேள்விகளை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள்,…
விளவங்கோடு வேட்பாளராக டி.டி.பிரவீன்: கவனத்தை ஈர்க்கும் காரக்கோணம் மருத்துவக் கல்லூரி வழக்கின் பின்னணி!
விளவங்கோடு தொகுதியின் வேட்பாளராக முன்னாள் சபை செயலாளர் டி.டி.பிரவீன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்புடைய வழக்கொன்று குறித்த தகவல்கள் தற்போது தேர்தல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருவனந்தபுரம் காரக்கோணம் டாக்டர்.சோமர்வெல் மெமோரியல் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 28 மாணவர்களின் பெற்றோர்களிடம் சுமார் ரூ.7.22 கோடி பணம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முன்னாள்…
பழனி பங்குனி உத்திரம்: 150 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நடைபயணம்!
குள்ளவீரன் பட்டி கிராம மக்கள் தீர்த்தக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்… பழனி, ஏப்ரல் 02:பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தலைமுறை கடந்த பக்திஇத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குள்ளவீரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 மனை…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு!
பழனி | ஏப்ரல் 02: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாடு பிராமண சமாஜம் தனது முழு ஆதரவை அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தச் சமாஜத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம், மாநிலத் தலைவர் ஹரிஹர முத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துத் தலைவர் ஹரிஹர முத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு ஆட்சிமுறைக்கு ஆதரவு “தமிழக…
