தமிழ்நாடு
தேவாலய பாதுகாப்பில் காவல் துறை வெற்றி “மன அமைதியுடன் வழிபாடு செய்தோம்” – மாணவி பாராட்டு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் செயல்திறன் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. குறிப்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் 2025 கிறிஸ்துமஸ் திருவிழா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாகர்கோவில் சேர்ந்த மாணவி என். நேத்ரா தேவி, “இந்த ஆண்டு மன அமைதியுடன் தேவாலயத்திற்கு சென்று வர முடிந்தது” எனக் கூறி, நேரில் சந்தித்து பாராட்டு பத்திரம் வழங்கினார். காவல் துறையின் விழிப்புணர்வு…
திமுக தான் என் மூச்சு… ஆனால் என் குரல் யாருக்காவது கேட்கிறதா?’ – அடிமட்ட தொண்டனின் கொந்தளிப்பு!
“கலைஞர் என் பேச்சு, தளபதி என் நாடித்துடிப்பு… ஆனால் அங்கீகாரம் எங்கே?” – உருக்கும் உண்மை வெளிப்பாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்ட தொண்டர்களிடையே கொந்தளிப்பு நிலை உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. “திமுக தான் என் மூச்சு… கலைஞர் தான் என் பேச்சு… தளபதி தான் என் நாடித்துடிப்பு…” என்று உயிரோடு இணைத்துப் பற்றிக்கொண்டு வாழும் ஒரு அடிமட்ட தொண்டன், இன்று தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். கட்சிக்காக பகலும் இரவும் பாராமல் உழைக்கும் தொண்டர்களின்…
கோவை மாவட்டம் கரும்பு கடை பகுதியில் ஈகைத் திருநாள் தொழுகை.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் ஈகைத் திருநாள் பெருநாள் தொழுகை இன்று காலை 7 மணிக்கு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் ஜனாப் PS. உமர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் தொழுகையை நடத்தி வைத்தார். உலக அமைதி மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்காக சிறப்பு பிரார்த்தனையையும் அவர் முன்னெடுத்தார்.நிகழ்வை அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைந்தார். இதில் ஆண்கள்-பெண்கள் என 15000 திற்கும்…
“நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப…” – நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!
நாகர்கோவில், மார்ச் 20 : தனியார் தொலைக்காட்சியில் நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இளைஞர்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். விவாதத்தின் போது அமைச்சர் பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடர்ந்து விசில் அடித்தும், கிண்டல் செய்தும் இடையூறு…
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் வழிகாட்டல் படி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.த ரவிசங்கர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளராக செயலாற்றி வரும் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து அவர்கள் மற்றும் துணை ஆணையர் வெங்கடேஷ் விளையாட்டு விழாவிற்கு தலைமை தாங்கி…
உதவியாளர்களின் பிடியில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்?” – சமூக ஊடகங்களில் வெளியிட்ட பகீர் வீடியோவால் கன்னியாகுமரியில் பரபரப்பு!
கன்னியாகுமரி: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் பின்புல நிகழ்வுகளை பேசுவதாகக் கூறி இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, கன்னியாகுமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், முன்னாள் அமைச்சர் தன்னைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே வைத்துள்ளதாகவும், உண்மையான கட்சித் தொண்டர்களுக்கும் அவருக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தன்னை ஜெய தங்கராஜ் அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த நபர், முன்னாள் அமைச்சர் பொதுமக்களுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ எளிதில் கிடைப்பதில்லை என்று…
ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு.
பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள அடிவளிமண்டலத்தில், அழுத்த வேறுபாடுகளின் காரணமாக மிக வேகமாக வீசும் குறுகிய காற்றோட்டம் ‘ஜெட் காற்று’ எனப்படுகிறது. இந்த மேலடுக்கு அதிவேகக் காற்றில் தற்போது ஒரு சிறிய வளைவு அல்லது திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று விரிவடைந்து, செங்குத்தான மேகங்கள் உருவாவதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் விளைவாக, வருகிற மார்ச் 20-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு…
அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்
மதுரையில் அனைத்து நீதி கட்சி மாநிலத் தலைவர் P.O.யோசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டார்கள் இந்த சந்திப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லானை கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் செல்வம் தலைமை ஒருக்கினைபாளர் , விஜயன் மாநில பொருளாளர், கார்த்திகா,ஜான்சன், சுந்தர், வெங்கடேஷ், சுதர்சன், பாண்டி செல்வி, மணிகண்டன், யாழினி, முரளி, கெளரி,…
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5 மாநிலங்களிலும்17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.” தமிழ்நாடு வாக்காளர்கள் மொத்தம் – 5.67 கோடி பேர் என வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் – 2.77 கோடி , பெண்கள் – 2.89 கோடி , மூன்றாம் பாலினத்தவர் – 7,617 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் முதல்…
மாற்றுதிரனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் விலையில்லாத மாற்றுத்திறனாளிக்கான இருசக்கர வாகனம்வழங்கினார். உடன்,கோவை மாவட்ட துணை மேயர் திரு, வெற்றி செல்வன், அரசு ஊழியர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
