தமிழ்நாடு
ஊர்க்குருவியும் உள்ளூர் பருந்தும்: ஒரு ‘விசில்’ ரகசியம்!
நம்ம ஊர் பெரிய ஆலமரத்துக் கிளையில் கம்பீரமாக அமர்ந்திருந்தது உள்ளூர் பருந்து. அப்போது மூச்சிரைக்கப் பறந்து வந்து அதன் அருகில் அமர்ந்தது ஊர்க்குருவி. ஊர்க்குருவி: அண்ணே… பருந்து அண்ணே… ஒரு சூடான ‘மேட்டர்’ கிடைச்சிருக்குண்ணே! அப்படியே ‘கிரிஸ்பி’யான ஒரு நியூஸ்! உள்ளூர் பருந்து: என்ன குருவி, இறக்கை எல்லாம் இவ்வளவு படபடக்குது? மேலிருந்து பார்த்த வரைக்கும் ஊர் அமைதியாகத்தானே இருக்கு. அங்க கீழே என்ன விசேஷம்? ஊர்க்குருவி: வெளியில பார்க்கத்தான் அண்ணே அமைதி, ஆனா உள்ளுக்குள் பெரிய…
கனரக லாரி தடைக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் குடும்பங்களுடன் உரிமையாளர்கள் முற்றுகை.
வாழ்வாதாரம் பாதிப்பு குற்றச்சாட்டு; அனுமதி இல்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் கனரக டாரஸ் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இணைந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, தடை காரணமாக வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும், வாகனங்களை மீண்டும் இயக்க…
வழக்கை வாபஸ் வாங்கு இல்லையேல் மகனை சிறையில் அடைப்பேன் – மதுரை காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்.
மதுரை : நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் முட்டை கடை நடத்தி ஒரு அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ராஜேஸ்வரி மற்றும் அவர் குடும்பத்தினரை தாக்கியுள்ளார்கள் இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விளக்கு தூண் காவல் நிலையத்தில் உள்ள விஜயகுமார் (SA) பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை வழக்கை வாபஸ் வாங்கு இல்லை என்றால் உனது மகனை சிறையில் வைத்து…
நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு உற்சாக வரவேற்புகட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி ஆதரவாளர்கள் பங்கேற்பு.
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். ஆஸ்டின் அவர்களுக்கு 48வது வார்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக 48வது வார்டு வட்டக் கழக செயலாளர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் கட்சித் தொண்டர்களின் செயற்பாட்டை வெளிப்படுத்தியது. இந்த வரவேற்பு நிகழ்வில் வட்டக் கழக துணை செயலாளர் இப்ராஹிம், ஹாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜி பாபு, முன்னாள் எம்.சி. ஹாஜி பாபு ஆகியோரும்…
பொதுமக்கள் அறிவிப்பு : பழனி சட்டமன்ற தொகுதி குறைகளைத் தீர்க்க புதிய முயற்சி!
பழனி | [14.04.2026] பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், அவற்றுக்கு உரிய அதிகாரிகளின் மூலம் தீர்வு காணவும் புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் குரல் – தொகுதியின் தீர்வு! நமது தொகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சனைகள் மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளை பொதுமக்கள் தற்போது இந்தத் தளம் வாயிலாகப் பதிவு செய்யலாம். நீங்கள் அளிக்கும் புகார்கள் தொகுக்கப்பட்டு, ஊடகச் செய்திகளாக வெளியிடப்படும். மேலும், அவை…
அம்பேத்கர் 135: கன்னியாகுமரியில் விசிக மரியாதை நிகழ்வு.
வடசேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி; கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில், பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வடசேரியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோபிபேரறாவாளன் தலைமையேற்றார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த கொள்கைகள் குறித்து சுருக்கமாக பேசப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்….
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை: தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பி பார்க்க வைப்போம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ள ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம் என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 14-உலக குவாண்டம் தினம்.
உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களால் ‘உலக குவாண்டம் தினம்’ (World Quantum Day) கொண்டாடப்படுகிறது. அணுக்களுக்குள் இருக்கும் மிக நுண்ணிய துகள்களின் செயல்பாடுகளை விளக்கும் குவாண்டம் இயற்பியல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். இயற்கையின் அடிப்படை ரகசியங்களைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத் தொழில்நுட்பங்களான குவாண்டம் கம்ப்யூட்டிங், அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் மருத்துவக் கருவிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவாண்டம் மெக்கானிக்ஸில் மிக முக்கியமான மாறிலியான பிளாங்க் மாறிலியின்…
மதுரை : நெல் பேட்டையில் உள்ள தயிர் மார்கெட் தனி நபருக்கு சொந்தமா!?
நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் முட்டை கடை நடத்தி வரும் அன்பழகன் தனக்கு சொந்தமான வாகனத்தை தயிர் மார்கெட்டில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் விளக்கு தூண் காவல் துறை உதவியுடன்? அத்துமீறி வாகனத்தை இடையூறாக நிறுத்தி உள்ளார். நெல்பேட்டையில் பகுதியில் தயிர் மார்கெட் தனி நபருக்கு சொந்தமானதா ?அல்லது மதுரை மாநகராட்சிக்கு சொந்தமானதா..!?என பெண் வியாபாரிகள் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். மார்கெட்டில் இடையூறாக உள்ள வாகனம் அகற்ப்படுமா!?
தென்னந்தோப்பில் முதியவர் சடலம் மீட்பு:எஸ்.டி.பி.ஐ மருத்துவக் சேவை குழு உதவியுடன் ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றம்.
கன்னியாகுமரி, ஏப் 10, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புளியடி சுடுகாட்டுப் பகுதியிலுள்ள தென்னந்தோப்பு ஒன்றில், முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் வெட்டூர்ணிமடம் அடுத்த கட்டையன்விளையைச் சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரின் மகன் தாசன் (76) என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் இறந்து சுமார் மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.சடலம் துர்நாற்றம் வீசும் அளவிற்கு மிகவும்…
