தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைசிய இளைஞர் சங்கம் ஆண்டு விழா.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைஸ்ய இளைஞர் சங்கம் 46 ஆம் ஆண்டு விழா சங்கராபுரம் கடைவீதி வாசவி மஹாலில் இனிதே துவங்கி ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு விழாவில் ஆரிய வைசிய சமூகத்தை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 ஆண்டு பிறந்தநாள் விழா.
கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 ஆண்டு பிறந்தநாள் விழா காணும் உயர்த்திரு இரா குமரகுரு மாவட்ட கழக செயலாளர் கள்ளக்குறிச்சி மாவட்ட திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்A.R. செண்பகவேல் திருநாவலூர் ஒன்றிய கழக செயலாளர்M. பரமாத்மாGK. வேல்முருகன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இரா சந்திரசேகரன் இன்றைய எம்ஜிஆர் மன்றம் தலைவர்A. செல்வகுமார் இளைஞர் அணி மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர்C. மவுரிஸ்ராஜா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த…
சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா.
சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 15-ம் ஆண்டுவிழா நடைபெற்றது.பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.பள்ளியின் துணைத்தலைவர் மகேந்திரன்,செயலாளர் சுகந்திபட்டுராஜன்,துணைச்செயலாளர் பிரபாகரன்,பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மாணவ, மாணவிகளின் நடனம், பரதநாட்டியம்,நாடகம்,யோகா போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழும்,பரிசு வழங்கி பாராட்டினர்.இதில் ஒருங்கிணைப்பாளர் சாப்ஜான்,இயக்குனர்கள் ஜெயக்குமார், பால்ராஜ், சாரதாரமேஷ்பாபு,கலைச்செல்வி குணசேகரன், பள்ளி முதல்வர் சுந்தரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள்,ஜெயம் குழு உறுப்பினர்கள்,ஊழியர்கள்,பெற்றோர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB….
பழனி நெய்க்காரப்பட்டி ரேணுகாதேவி பள்ளியில் 5000 மாணவர்கள் பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து பொங்கல் திருவிழா கொண்டாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாதேவி குழுமத்தின்பி.ஆர்.ஜி சிபிஎஸ் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 5500 க்கும் மேற்பட்டோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு நம்மளுடைய பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக மஞ்சுவிரட்டு காளையின் வடத்தைப் பிடித்து உலா வருதல் மற்றும்.கண்ணைக் கட்டி பானை உடைத்தல். சிலம்பம் சுற்றுதல் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவில் சிறப்பு நிகழ்வாக மாணவ மாணவியர்கள் ஒன்று கூடி பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து காட்சியளித்தனர்….
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழா! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!
திருநெல்வேலியில பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து, பாளையங்கோட்டையில் உள்ள, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து, இன்று [ஜன.13] சமத்துவ பொங்கல் விழாவை நடத்தினர். இந்த விழாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், தலைமை வகித்தார். விழாவில், திருநெல்வேலி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து விழாவினை, மிகச்சிறப்பாக நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னுடைய உரையில், குறிப்பிட்டதாவது: “பொங்கல் விழா என்பது….
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் துணைத் தலைமையாசிரியர் மதியழகன் முன்னிலையில் மற்றும் ஆசிரிய ஆசிரியை பெருமக்கள் அனைவரும் மாணவர்களோடு பொங்கல் விழா கொண்டாடினார்கள். அனைவர்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் சுண்டல் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.! மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை.!
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்காக அரசாணையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பாக சட்டப்பேரவையில் 2021 – 2022 ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் அடிப்படையில், நகர்ப்புறத்துக்கு இணையான வளர்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைத்து விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. அந்தவகையில் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இணைப்பு சம்பந்தமாக தொடக்கம் முதலே ஜோத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு…
நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி ஜனவரி 13- தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் அமைந்துள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு தாளாளர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார் .பள்ளியின் முதல்வர் சித்தீக்கா பர்வீன் வரவேற்று பேசினார் இந்நிகழ்ச்சியில் விழுதுகள் சேகர் முதுபெரும் செய்தியாளர் முகமது அலி என்ற பேபி முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலுக்கு வாழ்த்துக்கள் கூறினார் பாரம்பரிய…
கைதி தப்பி ஓட்டம்.! தேடுதல் வேட்டையில் மடத்துக்குளம் போலீசார்.!
மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் ( 23 ) இவர் நேற்று முன்தினம் மடத்துக்குளம் அடுத்துள்ள கேடிஎல் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக நேற்று மதியம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக மடத்துக்குளம் காவல்நிலையம் அழைத்து வரும்போது காவல்நிலைய வளாகத்தில் போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடி விட்டார். இதனையடுத்து தப்பியோடிய முருகானந்தம் என்பவரை பிடிக்க உடுமலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்…
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற, திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்! தமிழக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் பங்கேற்பு!
திருநெல்வேலி,ஜன.11:-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி கிழக்கு மாவட்டதிமுக செயலாளரும், முன்னாள் தமிழக சபாநாயகருமான இரா. ஆவுடையப்பன் ஆலோசனையின் பேரில், நாங்குநேரி மேற்கு ஒன்றியம் தளபதி சமுத்திரம் சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து, இன்று [ஜனவரி.11] காலையில், நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எஸ். சுடலை கண்ணு தலைமையில், BLA2,BLC பூத் பாக முகவர்கள் கலந்து கொண்ட “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது. கூட்டத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மேலிட பார்வையாளரும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை…
