Headlines
கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கல்

கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கல்.

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சி 2026-ல் மீண்டும் தொடர்ந்திட கழகத்தின் இளம் தலைவர், இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்ஆசியுடனும், மேற்கு மண்டலத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை, மக்கள் தளபதி அண்ணன் V. செந்தில் பாலாஜி அவர்களின் வாழ்த்துகளுடனும் ​கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளரும், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், தலைமைக்…

Read More
சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்

சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்–2026 முன்னிட்டு, மண்டல அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இரு நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு. இரா. சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். 7 மண்டலங்களில் ஒரே நேரத்தில் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும்…

Read More
காடேற்றி கிராம மக்களின் உருக்கமான கோரிக்கை.!

காடேற்றி கிராம மக்களின் உருக்கமான கோரிக்கை.!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடேற்றி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பேருந்து சேவை இயக்கப்படாத நிலை நீடித்து வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குள் அமைந்துள்ள காடேற்றி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், இக்கிராமத்திற்கு அரசு போக்குவரத்து வசதி வழங்கப்படாததால், அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமம் காடேற்றி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தினமும்…

Read More
நாகர்கோவிலில் துரித நடவடிக்கை மூலம் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டிய காவல்துறை: சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.!

நாகர்கோவிலில் துரித நடவடிக்கை மூலம் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டிய காவல்துறை: சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.!

நாகர்கோவில், மார்ச் 3: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதிகளில், அரசியல் கட்சியினரிடையே உருவான மோதல் சூழலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஆர். ஸ்டாலின், இ.கா.ப., அவர்களின் தலைமையிலான காவல்துறை உடனடியாகச் செயல்பட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்நிலையில், நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்துச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடந்தது என்ன? கடந்த சில நாட்களாக நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே பதற்றமான…

Read More
தென் மண்டலம்… யாருக்குச் சொந்தம்? "தென் மாவட்டங்களில் திமுக-வின் மைக்ரோ பிளான் - அதிமுக-வின் மெகா நம்பிக்கை"...

தென் மண்டலம்… யாருக்குச் சொந்தம்? “தென் மாவட்டங்களில் திமுக-வின் மைக்ரோ பிளான் – அதிமுக-வின் மெகா நம்பிக்கை”…

“தமிழக தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் பார்வையும் இப்போது தென் மாவட்டங்களை குறி வைக்க தொடங்கியுள்ளது. ஒருகாலத்தில் அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்த தென் மண்டலம், இப்போது யாருடைய வசம்?எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க திமுக போடும் ‘மைக்ரோ பிளான்’ என்ன? சசிகலா – ஓபிஎஸ் எனும் இரட்டை சவால்களை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது? இதுகுறித்த ஒரு விரிவான செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.” “2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தென்…

Read More
மயான ஆக்கிரமிப்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.!

மயான ஆக்கிரமிப்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.!

திருப்பூர் மாவட்டம் , உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வி.வல்லகுண்டாபுரம் கிராமத்தில் சுமார் இரண்டு ஏக்கரில் அரசின் பொது இடத்தில் மயானம் ஒதுக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூட சிரமம் ஏற்பட்டுள்ளது. மயானத்துக்கு செல்லும் பாதையை மறித்து வேலி அமைத்தும், கட்டிடம் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்…

Read More
ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி! குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க புகார் மனு வழங்கினர்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி! குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க புகார் மனு வழங்கினர்.

மடத்துக்குளம் அடுத்துள்ள ஜோத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கண்ணீர் மல்க மனு ஒன்றை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கணியூர் அருகே உள்ள அரியநாச்சிபாளையத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். ஏலச்சீட்டில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் பணம் செலுத்தி வந்தோம் ரூபாய் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை சீட்டு மாத சீட்டு தினசரி சீட்டு என ஏலச்சீட்டு…

Read More
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

மதுரையில் கூடல்அழகர் பெருமாள் கோவில் 108 திவ்ய தரிசனங்களில் ஒன்றாக விளங்குகிறது இத்திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான டவுன் ஹால் ரோடு பகுதியில் உள்ள தெப்பத்தில் இன்று தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது . இந்த தெப்ப திருவிழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் மதுரை டவுன் ரோடு பகுதியில் உள்ள வியாபாரிகள் சார்பில் சிறப்பு பூஜைகளும் ,அன்னதானமும் நடைபெற்றது . தெப்பத் திருவிழாவில் வியாபாரிகள் சார்பில்…

Read More
தமிழ்நாடு அச்சு ஊடக உரிமையாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அச்சு ஊடக உரிமையாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்.

கோவை ஆட்சியர்அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அச்சு ஊடக உரிமையாளர் சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரி, அவர்கள், அவர்களுக்கு, தேவையான சில பத்திரிகையாளர்களை ஆதரித்தும் மற்ற பத்திரிக்கையாளர் அனைவரையும், புறக்கணிப்பதை, கண்டித்தும், இதைக் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கண்டித்தும் அனைத்து தினசரி மாதம் வாரம் வரும் இதழ்களின் பத்திரிகையாளர்களுக்கு, ஒன்றியஅரசு வழங்க அறிவுறுத்தியுள்ள, பஸ் பாஸ் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள். பஸ்…

Read More
மாவட்ட செயலாளருக்கு நகர செயலாளர் பச்சைக்கொடி.

மாவட்ட செயலாளருக்கு நகர செயலாளர் பச்சைக்கொடி.

திமுக பழனி நகர செயலாளர் வேலுமணி பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாருக்கு சென்னை அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். பழனியில் மீண்டும் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் ஐ.பி.செந்தில்குமார் போட்டியிட மாட்டார், திண்டுக்கல்லில் போட்டியிடுவார் என்றும் பழனியில் வேலுமணி போட்டியிடுவார் என்று பழனி அரசியலில் உலவி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது இந்நிகழ்வு.

Read More